பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பண்டிகை காலச் சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு இன்று தொடங்கியது.
பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 29 ஆயிரத்து 213 பேருந்துகள் மாநிலம் முழுக்க இயக்கப்படவிருக்கின்றன. சென்னையிலிருந்து மட்டும் சுமார் 4950 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சில நாள்களுக்கு முன் வெளியிட்டார்.